என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுகாதாரத்துறை செயலாளர்"
- புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.
சென்னை:
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாத்தூர்:
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இன்று சாத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #HIVBlood #PregnantWoman
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் நிபா வைரஸ் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்துக்கு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
சேலம் தனியார் மருத்துவமனையில் உடலுறுப்பு திருட்டு நடைபெறுவதாக கேரள முதல்வர் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் தற்போதுதான் வந்துள்ளது. பிலிம் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்