search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை - நிவாரணம்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
    X

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை - நிவாரணம்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை, நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறினார். #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் இன்று போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.



    இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று விருதுநகர் வந்தார். அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #HIVBlood #PregnantWoman

    Next Story
    ×