search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hiv impact"

    எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். #ministerrajendrabalaji #HIVBlood #PregnantWoman

    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சாத்தூர் படந்தாலில் அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக விருதுநகர் கலெக்டரிடம் பேசி அவர் கேட்ட பகுதியிலேயே இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார். #ministerrajendrabalaji  #HIVBlood #PregnantWoman

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் கூறினார். #HIV #HIVBlood #Pregnantwoman
    விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்களிடம் விசாரணை நடக்கிறது.

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சுகப்பிரசவம் நடந்தாலும் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #HIV #HIVBlood #Pregnantwoman

    ×