search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவில் இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - டாக்டர் கருத்து
    X

    கருவில் இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - டாக்டர் கருத்து

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் கூறினார். #HIV #HIVBlood #Pregnantwoman
    விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்களிடம் விசாரணை நடக்கிறது.

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சுகப்பிரசவம் நடந்தாலும் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாக கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #HIV #HIVBlood #Pregnantwoman

    Next Story
    ×