search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு
    X

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். #MaduraiAIIMS #Modi
    மதுரை:

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அனைவருக்கும் எனது வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும் மோடி பேசியதாவது:-

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ள மதுரைக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன். இங்கு புகழ்பெற்ற சிவாலயம் உள்ளது. நாட்டின் குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இங்கு தொடங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் சிறந்த மருத்துவனையாக திகழும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும். மேலும் குஜராத், கவுகாத்தி ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரையில் ரூ. ஆயிரத்து 264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைகிறது. நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் அமைப்பதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை, தஞ்சை மருத்துவக்கல்லூரிகளில் பன்னோக்கு சிகிச்சை கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் நவீன மயமாக்கப்பட்டுள்னன. ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேயே இதுதான் சிறந்த காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 67 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2025 என்ற தொலை நோக்கு திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×