என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குளிக்க சென்றபோது பழவூர் அணைக்கட்டில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
சேரன்மகாதேவி:
மதுரை சோனியா நகரை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 58), கட்டிட தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் இல்ல கிரகபிரவேச நிகழ்ச்சிக்காக வந்தார்.
நேற்று மாலை அவர் பழவூர் அணைக்கட்டிற்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அதிகாரி வரதராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று 2-வது நாளாக தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப் போது பாஸ்கர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்