என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புளியம்பட்டி அருகே மனைவி கொரோனாவுக்கு பலியானதால் விவசாயி தற்கொலை
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கீழபூவாணி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது66), விவசாயி. இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமதாசின் மனைவிக்கு கொரோனா தொற்று நோய் தாக்கியது. இதில் சிகிச்சை பலன் இல்லாமல் அவரது மனைவி பலியானார்.
மனைவி இறந்தது முதல் ராமதாஸ் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார். மனைவி சென்ற இடத்திற்கே அவரும் செல்ல இருப்பதாக சிலரிடம் கூறி உள்ளார். அவர்கள் ராமதாசுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ராமதாஸ் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ராமதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்