search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    புளியம்பட்டி அருகே மனைவி கொரோனாவுக்கு பலியானதால் விவசாயி தற்கொலை

    புளியம்பட்டி அருகே மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள கீழபூவாணி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது66), விவசாயி. இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமதாசின் மனைவிக்கு கொரோனா தொற்று நோய் தாக்கியது. இதில் சிகிச்சை பலன் இல்லாமல் அவரது மனைவி பலியானார்.

    மனைவி இறந்தது முதல் ராமதாஸ் மிகவும் சோகமாக காணப்பட்டுள்ளார். மனைவி சென்ற இடத்திற்கே அவரும் செல்ல இருப்பதாக சிலரிடம் கூறி உள்ளார். அவர்கள் ராமதாசுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ராமதாஸ் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ராமதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×