என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணகுடியில் நகை திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்26 Feb 2021 6:06 PM GMT (Updated: 26 Feb 2021 6:06 PM GMT)
பணகுடியில் ஆசிரியர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி துணை மின்நிலையம் அருகே உள்ள வைஷ்ணவி கார்டன் பகுதியசை் சேர்ந்தவர் துரை (வயது 54). இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறாா். கடந்த ஆண்டு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் துணை மின் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் துரை வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் லெப்பைகுடியிருப்பை சேர்ந்த சேகர் (33), மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த ரவி (35) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து உருக்கிய 20 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X