என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே மின்வாரிய பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
Byமாலை மலர்23 Feb 2021 10:59 AM GMT (Updated: 23 Feb 2021 10:59 AM GMT)
திண்டுக்கல் அருகே மின்வாரிய பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத பழைய கட்டிடம் உள்ளது. இங்கு பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இருக்காது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துபோனார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வி மற்றும் போலீசார், சுவர் இடிந்து விழுந்ததில் பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியதில் அந்த நபரின் தலை, முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத பழைய கட்டிடம் உள்ளது. இங்கு பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இருக்காது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் நின்றிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துபோனார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வி மற்றும் போலீசார், சுவர் இடிந்து விழுந்ததில் பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியதில் அந்த நபரின் தலை, முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X