search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    வீட்டு பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு

    வீட்டு பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் ராகுல்நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28). பால்பாண்டி வெளியூரில் வேலைக்கு சென்று விட்ட நிலையில் பானுப்பிரியா தன்னுடைய உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். பானுப்பிரியா மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருட்டு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×