search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக்கொலை

    முத்துப்பேட்டையில் இன்று அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை மர்ம நபர்கள் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (வயது 38). இவருக்கு திருமணமாகி 1 குழந்தை உள்ளது.

    இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் உள்ளன.

    இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். முத்துப்பேட்டை எல்லையில் உள்ள டாஸ்மாக் அருகே சென்றபோது அங்கு மறைந்திருந்த சிலர் 3 மோட்டார் சைக்கிள், 1 காரில் ராஜேசை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.

    இதனை பார்த்த ராஜேஷ் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். ஆனாலும் வேகமாக வந்த மர்ம நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை கொண்டு மோதினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேஷ் உயிரை காப்பாற்றி கொள்ள முத்துப்பேட்டை காட்டுப்பகுதிக்குள் வேகமாக ஓடினார். அவரை ஆயுதங்களுடன் பின்தொடர்ந்த மர்மநபர்கள் விரட்டி சென்று ராஜேசை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அரிவாளால் அவரது தலையை துண்டித்தனர். இதில் துடிதுடித்து ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து துண்டிக்கப்பட்ட தலையோடு அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்துப்பேட்டை ஆசாத் நகரில் சாலையில் தலையை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்த காட்டுப்பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றினர். அப்போது அங்கு கிடநத ஒரு கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சாலையில் வீசப்பட்ட தலையை எடுக்க முயன்றனர். அங்கு திரண்டிருந்த ராஜேசின் உறவினர்கள் தலையை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×