என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு- 5 பேர் கைது
Byமாலை மலர்20 Feb 2021 9:52 AM GMT (Updated: 20 Feb 2021 9:52 AM GMT)
திருச்சி அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர்:
திருச்சியை அடுத்துள்ள அரியமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் மனைவி லட்சுமி (வயது 54). இவர் தனது பெயரை புதுக்கோட்டை மாவட்டம் மேலபச்சைக்கொடி பிரேமானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி துர்காதேவி என மாற்றினார்.
பின்னர் அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக நேற்று காலை திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது சேதுராப்பட்டியிலுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை பதிவு செய்வதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அவரது ஆவணங்களை மண்ணச்சநல்லூர் மேல ஸ்ரீதேவி மங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் பார்த்திபன் தயார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆவணங்களில் சார்பதிவாளருக்கு முன்பாக கையொப்பமிடும்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனே சார் பதிவாளர் பொறுப்பு உடனடியாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது சம்பந்தமாக கீழ பஞ்சப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம், அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த ஆள் மாறாட்டம் குறித்து ராஜசேகர், பார்த்திபன், பாஸ்கர், ஆறுமுகம், லட்சுமி ஆகிய 5 பேரையும் கைது செய்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான ஆரோக்கியசாமி மற்றும் பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியை அடுத்துள்ள அரியமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நல்லேந்திரன் மனைவி லட்சுமி (வயது 54). இவர் தனது பெயரை புதுக்கோட்டை மாவட்டம் மேலபச்சைக்கொடி பிரேமானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர் செல்லையா மனைவி துர்காதேவி என மாற்றினார்.
பின்னர் அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சீனமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்குவதற்காக நேற்று காலை திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது சேதுராப்பட்டியிலுள்ள ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை பதிவு செய்வதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார்.
அவரது ஆவணங்களை மண்ணச்சநல்லூர் மேல ஸ்ரீதேவி மங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் பார்த்திபன் தயார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆவணங்களில் சார்பதிவாளருக்கு முன்பாக கையொப்பமிடும்போது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனே சார் பதிவாளர் பொறுப்பு உடனடியாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது சம்பந்தமாக கீழ பஞ்சப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம், அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த ஆள் மாறாட்டம் குறித்து ராஜசேகர், பார்த்திபன், பாஸ்கர், ஆறுமுகம், லட்சுமி ஆகிய 5 பேரையும் கைது செய்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான ஆரோக்கியசாமி மற்றும் பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X