search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி மார்ச் 1-ந்தேதி சென்னை வருகை

    பிரதமர் மோடி மார்ச் 1-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வருகிறார். மறைமலைநகரில் நடைபெறும் பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தீவிரமாகி வருகிறது.

    பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி காலையில் புதுவை வருகிறார். அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

    அதைத் தொடர்ந்து தனி விமானத்தில் கோவை வருகிறார். அங்கு விமான நிலையத்தில் பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் கொடிசியா அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து கொடிசியா மைதானத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    மீண்டும் மார்ச் 1-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். மறைமலைநகரில் நடைபெறும் பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.

    இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக பா.ஜனதா கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
    Next Story
    ×