என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழுகுமலை அருகே வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்13 Feb 2021 12:42 PM GMT (Updated: 13 Feb 2021 12:42 PM GMT)
கழுகுமலை அருகே வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்ன காலனி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் சாலமன்(வயது 45). கழுகுமலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்றார். மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் அரை பவுன் மோதிரம், அரைப் பவுன் கம்மல் ஆகியவை திருடு போயிருந்தது. யாரோ மர்மநபர் நோட்டமிட்டு வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X