search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

    மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பூர்:

    சென்னை தண்டையார்பேட்டை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமார். இவர் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மார்க்கெட் பகுதியில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான கவுதம் (வயது 21) கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    குமார் வெளியே சென்றதால் கடையில் கவுதம் இருந்தார். அப்போது மின்விசிறி சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×