என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழுகை நேரத்தில் பிரசாரத்தை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி- பொதுமக்கள் பாராட்டு
Byமாலை மலர்11 Feb 2021 1:53 AM GMT (Updated: 11 Feb 2021 1:53 AM GMT)
திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழுகை நேரத்தில் தனது பேச்சை நிறுத்தினார். இதற்கு பொதுமக்கள் பாராட்டி கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
திருப்பத்தூர்:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூரில் நேற்று பகல் மக்கள் கூட்டத்தின் நடுவே எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அருகேயுள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொண்டனர். இந்த தொழுகை மேற்கொள்ளும் சத்தம் ஒலிபெருக்கியில் கேட்டவுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். தொடர்ந்து தொழுகை முடியும் வரை அவர் பேசாமல் அமைதி காத்தார். தொழுகை முடிந்தவுடன் அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூரில் நேற்று பகல் மக்கள் கூட்டத்தின் நடுவே எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது அருகேயுள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொண்டனர். இந்த தொழுகை மேற்கொள்ளும் சத்தம் ஒலிபெருக்கியில் கேட்டவுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். தொடர்ந்து தொழுகை முடியும் வரை அவர் பேசாமல் அமைதி காத்தார். தொழுகை முடிந்தவுடன் அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X