என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
Byமாலை மலர்10 Feb 2021 11:23 AM GMT (Updated: 10 Feb 2021 11:23 AM GMT)
பெரம்பலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட செஞ்சேரி நீலியம்மன் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் நேற்று செஞ்சேரிக்கு விரைந்தனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் வளைத்து பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜா(வயது 36), வேலுசாமி (48), பெரம்பலூர் நகர்ப்பகுதியில் திருவள்ளுவர் தெரு, திருநகர், ஆலம்பாடி சாலை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நீலகண்டன் (42), அழகர்சாமி (57), அன்புமதி (38), அஜீஸ் (55), சரவணன் (49), பழனிசாமி (35), நெடுவாசலை சேர்ந்த வேல்முருகன் (34), செஞ்சேரியை சேர்ந்த சசிகுமார் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X