search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகத்தில் ஒரே நாளில் 5.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

    தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 23.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 631 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 64 ஆயிரத்து 400 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் 7 ஆயிரத்து 317 சுகாதாரப்பணியாளர் மற்றும் 3 ஆயிரத்து 92 முன்கள பணியாளர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 409 பேருக்கு ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்தும், 119 சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் 22 முன்கள பணியாளர் என மொத்தம் 141 பேருக்கு ‘கோவேக்சின்' தடுப்பு மருந்தும் என நேற்று மொத்தம் 10 ஆயிரத்து 550 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்தவகையில் நேற்று ஒரு நாள் மட்டும் 5.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 23.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×