என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை தொடங்கியது
Byமாலை மலர்8 Feb 2021 6:58 AM GMT (Updated: 8 Feb 2021 6:58 AM GMT)
10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
சென்னை:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
பின்னர் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக ஒருசில வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் காணொலி வாயிலாகவே விசாரிக்கப்பட்டன.
10 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நேரடியாக விசாரணைகள் நடத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
ஆனாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இறுதி வழக்கு விசாரணைகள் மட்டும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் விசாரிக்கப்படும். 1 மணி நேரத்துக்கு 5 வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வழக்குகள் காணொலி மூலமே நடக்கும்.
ஒரு வழக்கில் இரு தரப்பிலும் தலா ஒரு வக்கீல் வீதம் கோர்ட்டு அறையின் பரப்பளவுக்கு ஏற்ப வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆஜராக வந்த வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பத்தை சோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் காணொலி காட்சி வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
பின்னர் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக ஒருசில வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் காணொலி வாயிலாகவே விசாரிக்கப்பட்டன.
10 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் நேரடியாக விசாரணைகள் நடத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
ஆனாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சில கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இறுதி வழக்கு விசாரணைகள் மட்டும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் விசாரிக்கப்படும். 1 மணி நேரத்துக்கு 5 வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வழக்குகள் காணொலி மூலமே நடக்கும்.
ஒரு வழக்கில் இரு தரப்பிலும் தலா ஒரு வக்கீல் வீதம் கோர்ட்டு அறையின் பரப்பளவுக்கு ஏற்ப வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆஜராக வந்த வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பத்தை சோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X