என் மலர்
நீங்கள் தேடியது "ஐகோர்ட் மதுரை கிளை"
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது.
மனுதாரர்கள் தரப்பு, கோவில் தரப்பு, வக்பு வாரியம் தரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் இன்று அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் இதற்கு முன் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபம் ஏற்றும் தூண் தான் என்பதற்கு மனுதாரர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
நில அளவை துறை ஆய்வு செய்ததில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் தமிழ்நாட்டில் பல தூண்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
1920-ல் தனிநீதிபதி ஆய்வுக்கு சென்றபோது திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் இருந்திருந்தால் உத்தரவில் கூறியிருப்பார்.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழர்கள் கலாச்சாரம் எனக்கூறி திருப்பரங்குன்றத்தில் அதே வழக்கத்தை கேட்பது ஏற்புடையதல்ல.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனிநீதிபதி உத்தரவிட முடியுமா? என்பது தான் எங்களது கேள்வி என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் தீபத்தூண் இல்லை என்பது தான் எங்கள் தரப்பு வாதம். தூணில் தீபம் ஏற்றுமாறு மனுதாரர் வைத்த கோரிக்கையை கோவில் நிர்வாக அதிகாரி சட்டப்படி தான் நிராகரித்துள்ளார்.
சட்டப்படி திருப்பரங்குன்றம் வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் நடத்தியிருக்க வேண்டும்.
இவ்வாறு அரசு தரப்பில் வாதம் நடைபெற்றது.
- மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
- மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும்.
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தெலுங்கானாவின் முன்னாள் அரசு வக்கீல் எஸ். ஸ்ரீராம் ஆஜராகி வாதாடி வருகிறார். அதன் விவரம் வருமாறு:-
தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும்பட்சத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்படுவது தனி நீதிபதி உத்தரவை அவமதிப்பதாகும். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவு காரணமாக எந்த பொது அமைதியும் சீர்குலையவில்லை. அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை.
எனவே இந்த உத்தரவை மனசாட்சியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்பதன் மூலம் அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை மீறி உள்ளனர். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
மனுதாரரால் பொது அமைதி குலைந்தது என்பது ஒரு சாக்குபோக்கு காரணம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சம்பவத்தன்று திருப்பரங் குன்றம் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொது அமைதி கெடும் என்று அரசு தரப்பு கூறுவதும், அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்தனர். அதன் பின்பு மூத்த வக்கீல் ஸ்ரீராம் தனது வாதத்தை தொடர்ந்து கூறியதாவது:-
மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும். குறிப்பிட்ட இடத்தில்தான் வழிபடும் இந்த உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் ஒரு உரிமை அல்ல என்று மாநில அரசு வாதிடுகிறது. ஒருபுறம் இதைச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் இந்த உத்தரவு பொது ஒழுங்கிற்கு எதிரானது என்றும் வாதிட்டு வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
1996-ம் ஆண்டு நீதிபதி கனகராஜ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் தர்காவின் அருகில் 15 மீட்டர் தூரத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தை இரு மதத்திற்கு இடையே ஏற்படும் பிரச்சனை என்பது போல் திசை திருப்பி விட்டுள்ளனர். தனி நீதிபதி தனது கருத்தை தீர்ப்பில் திணித்து உள்ளார் என எதிர்த்தரப்பினர் வாதாடுவது ஏற்புடையதல்ல.
எனவே கோவில் நிர்வாகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றார்
அதற்கு நீதிபதிகள், தீப தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளதா? என கேட்டனர். அதற்கு வக்கீல் ஸ்ரீராம் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டியது கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட கலெக்டரின் கடமை.
இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது தொடர்ந்து விசாரணை நடந்தது.
- மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார்.
- மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.
மதுரை:
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை இன்று முற்பகலில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்பு தொடங்கியது. இதில் வக்பு வாரியம் சார்பில் வக்கீல் அப்துல் முபின் வாதாடினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
வக்பு வாரிய வக்கீல்:- மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தர்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் தொழுகையும் நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.
நீதிபதிகள்:- மலை உச்சியின் இரு இடங்களில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. தர்காவுக்கு சொந்தமான அது சார்ந்த நிலங்கள் என்னென்ன?
வக்பு வாரிய வக்கீல்:- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவும், மலையின் பின்பக்க பகுதியில் காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. அங்கு ஒருபுறம் பக்தர்களும், இஸ்லாமியர்களும் வந்து செல்ல குதிரைச்சுனை அருகில் இருவேறு பாதைகள் பிரிகிறது. கடந்த காலங்களில் தீபமேற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டு தனிநீதிபதி உத்தரவுகள் உள்ளன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை. நெல்லித்தோப்பு மற்றும் அதுசார்ந்த பாதைகள், அவ்விடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது. இதையெல்லாம் தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை.
தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார். அவற்றை நீதிபதிகள் பார்வையிட்டனர்.
நீதிபதிகள்:- மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்துதான் செல்ல வேண்டுமா? இல்லை வேறு பாதை உள்ளதா?
வக்புவாரிய வக்கீல்:- பழமையான மலை பாதை உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நெல்லித்தோப்பு தர்கா விற்கு செல்லும் படிக் கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது. மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.
1921-ம் ஆண்டில் சிவில் கோர்ட்டு தர்காவிற்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை பிரிவியூ கவுன்சிலும் உறுதி செய்துள்ளது என்றார்.
அதற்கு நீதிபதிகள், தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து வக்பு வாரியம் சார்பில் சர்வே செய்யப்பட்டு ஆவணங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தர்காவிற்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? உறுதியான ஆவணங்கள் கொடுக்க இயலுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவை இருந்தால் நாளை தாக்கல் செய்யுங்கள் என்றனர்.
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது.
- திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு தலங்கள் உள்ளன என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது. அதில் தொழுகையும் நடந்து வருகிறது. மலை உச்சியில் தர்கா, பின்பக்கத்தில் காசி விஸ்வநாதர் கோவில் இருபிரிவினரும் வந்து செல்ல தனித்தனியாக பாதை உள்ளதாக வக்பு வாரியம் தெரிவித்தது.
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சொந்தமான, அது சார்ந்த நிலங்கள் என்னென்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,
மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்க ஸ்தலங்கள், நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம். நெல்லித்தோப்பு, மலையில் உள்ள பாதை, படிக்கட்டுகள் தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தர்காவுக்கு சொந்தமான இடங்கள் குறித்து விசாரணையின்போது தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் உள்ள தூண் தொடர்பான படங்களை ஐகோர்ட் நீதிபதிகள் பார்த்தனர்.
மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்து செல்ல வேண்டுமா? வேறுபாதை உள்ளதா? என நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,
தர்காவை ஒட்டி குதிரைசுனை உள்ளது. அதனை தாண்டி தூண் உள்ளது. தர்காவிற்கு படிக்கட்டு பாதை உள்ளது. நெல்லித்தோப்பு தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது.
மனுதாரரின் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம். அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என பிரச்சனை எழுந்துள்ளது. தூண் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும்.
தீபத்தூண் என மனுதாரர் குறிப்பிடும் தூண் தர்கா இடத்தில்தான் உள்ளது. தீபத் தூணுக்கு செல்லும் மலைப்பாதையும் தர்காவுக்கு தான் சொந்தம்.
திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும். தூணும் தர்கா இடத்தில் உள்ளதால் அங்கு தீபம் ஏற்றுவதில் வக்பு நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை.
மலை உச்சியில் தர்கா இருக்கும் பகுதி சிக்கந்தர் மலை என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது. 1920-ம் ஆண்டு உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும் என வக்பு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.
- இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
அதன்படி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10:30 மணி அளவில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த கோர்ட்டு வழங்கிய அவகாசம் நிறைவடைந்து விட்டது என்றனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்தவரையில் அனைவரும் அமைதியை காக்கும் பட்சத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பழமையானது பல ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டு வரும் இடத்தில் தான் இந்த ஆண்டும் கார்த்திகை திருநாள் அன்று தீபம் ஏற்றப்பட்டு உள்ளது. இதே பகுதியில் மலை மீது சிக்கந்தர் தர்காவும் உள்ளது. மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனிநபர் விடுத்த கோரிக்கையை ஏற்புடையதல்ல என்பதால் அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக அவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த வழக்கு பொதுநல மனுவை போல விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராம ரவிக்குமார் மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட இயலாது. இந்த விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து இருந்தார். சிலர் சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். அந்த தர்காவின் அருகில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல. இதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சம்பந்தப்பட்ட தூண் சர்வே அளவு தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவாதம் நடந்து வருகிறது.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான்.
- மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மனு மீது ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது.
நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டுமெனில் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி மறுத்த நீதிபதிகள் அமைதியாக இருக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
தமிழக அரசு தரப்பு வாதத்தில்,
ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லா ஒருவர் தாக்கல் செய்த மனுவை பொதுநல வழக்கு போல் பாவித்து தனிநீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லாதவரின் மனுவை விசாரித்து அதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட இயலாது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான். 73 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 1912-க்கு பின்னர் இருமுறை மதப்பிரச்சனை எழுந்துள்ளது.
இந்தாண்டு தனிநீதிபதி மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தபோது நிலவிய சீரற்ற நிலைமையை சீர் செய்யவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தனிநபர் தீபமேற்ற முடியாது. சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் அல்ல.
மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்பது அழுத்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.
உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் ஏற்றுவது வழக்கம். திருப்பரங்குன்றத்தில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற முடியும் என்று அரசு தரப்பில் விவாதம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் சர்வே நடத்தியதில் தீபத்தூண் தான் என உறுதி செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானவை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது என தமிழக அரசு வாதிட்டது.
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன் என்றார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், "மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது. கோர்ட் கூட சொல்லமுடியாது. தேவஸ்தானமே முடிவுசெய்ய இயலும். இதுகுறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்சனை வந்தால் கோர்ட்டை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், "திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையின்போது திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் வரும் 17-ம் தேதி தலைமைச் செயலாளர், மதுரை மாநகர டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.
அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.
அதன்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார்.
அவரிடம் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு போலீஸ் கமிஷனர், "திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.
இதைக்கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.
தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐகோர்ட் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
இதற்கிடையே ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த மனுதாரர், மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
- தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை என்றார்.
சென்னை:
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
கார்த்திகை தீபம் என்பது தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படக் கூடியது.
தமிழர்கள் கொண்டாடக்கூடிய பண்டிகையில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையும் இல்லை.
தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது காலூன்ற வேண்டும் என மதவாத சக்திகள் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.
2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.
2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.
- பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது.
- இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
நேற்றைய தினம் திமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.
பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி அன்றே இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.
இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இருதரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.
தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது?
திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு நேற்று மாலை அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
அதன்பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.
அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.
அதன்பின், நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் எனவும் தெரிவித்தனர்
இந்நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது.
- வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அதுபோல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீசே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்ப பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, மனுதாரர் 9-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.






