என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்துக்கு கூடுதலாக 1.69 லட்சம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் வந்தன
Byமாலை மலர்23 Jan 2021 1:52 AM GMT (Updated: 23 Jan 2021 1:52 AM GMT)
தமிழகத்துக்கு கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி ‘கோவிஷீல்டு' மற்றும் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
முன்னதாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு' தடுப்பூசிகளும், 20 ஆயிரம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதையடுத்து சில நாட்கள் கழித்து 2-வது கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மேலும் கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில நடமாடும் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி ‘கோவிஷீல்டு' மற்றும் ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
முன்னதாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு' தடுப்பூசிகளும், 20 ஆயிரம் ‘கோவேக்சின்' தடுப்பூசிகளும் மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதையடுத்து சில நாட்கள் கழித்து 2-வது கட்டமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மேலும் கூடுதலாக 1 லட்சத்து 69 ஆயிரத்து 920 ‘கோவேக்சின்' தடுப்பூசிகள் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. அந்த தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில நடமாடும் மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X