என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி தமிழகம் வருகை
Byமாலை மலர்21 Jan 2021 7:38 PM GMT (Updated: 21 Jan 2021 7:38 PM GMT)
பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி தமிழகம் வருகிறார். ஜனவரி 30 மற்றும் 31-ம் தேதி மதுரையில் தங்கும் அவர் 234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன்பின், மாநில நிர்வாகிகள் மற்றும் சில மாநில கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
முன்னதாக, ஜனவரி 29-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பா.ஜ.க. பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜனவரி 23-ம் தேதி தமிழகம் வரவுள்ளார் எனவும், அவர் தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X