search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

    நிலக்கோட்டை அருகே பெற்றோர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளைபட்டியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகள் துர்கா (வயது 17). இவர், அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வீட்டு வேலையை சரிவர செய்யாததால், அவரை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். இதை அக்கம்பக்கத்தினர் அறிந்து அவரை மீட்டு உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், துர்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×