என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பட்டுக்கோட்டை அருகே தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து தாய்-மகள் பலி
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகே தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள வீரக்குறிச்சி நடுத்தெருவைச் சேர்ந்தவர் வரப்பிரசாதம். இவரது மனைவி மேரி (வயது47). இவர்களது மகள் நிவேதா(16).
கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மேரி தனது மகள் நிவேதாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
தொடர் மழையால் ஊறிப்போய் இருந்த வீட்டின் மண்சுவர் அப்போது பெய்து கொண்டிருந்த கனமழையால் நள்ளிரவில் திடீரென இடிந்து வீட்டின் உட்புறமாக விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த மேரி மற்றுமு நிவேதா ஆகிய இருவர் மீதும் சுவர் விழுந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளை அகற்றி அவர்களை மீட்டனர். ஆனால் தாய்-மகள் இருவரும் இடிபாடுகளில் சிக்கி மூச்சித் திணறி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை போலீசார் இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதே பகுதியில் நேற்று முன்தினம் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். இந்நிலையில் மழையால் சுவர் இடிந்து தாய்-மகள் பலியான சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்