என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி
Byமாலை மலர்15 Jan 2021 3:49 AM GMT (Updated: 15 Jan 2021 3:49 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பெரியபொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சிங்காரவேல் (வயது37). எலக்ட்ரீசியன். நேற்று காலை சிங்காரவேல் வேலைநிமித்தமாக மொபட்டில் ஏலகிரி மலைக்கு சென்று கொண்டிருந்தார். சின்னபொன்னேரி அருகே உள்ள சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது, ஏலகிரி மலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் அவர்மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பஸ்சில் சிக்கி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். படுகாயமடைந்த சிங்காரவேல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X