என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
Byமாலை மலர்13 Jan 2021 7:38 AM GMT (Updated: 13 Jan 2021 7:38 AM GMT)
பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
தோவாளை பூ மார்க்கெட்டிற்கு ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், சிதம்பரபுரம் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதுபோல மதுரை, பெங்களூரு, சேலத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகைப்பூக்களின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் இன்று காலை களை கட்டி இருந்தது.
பூக்கள் விற்பனைக்கு அதிகளவு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பிச்சி, மல்லிகைப் பூக்கள் இன்றும் குறைவான அளவே விற்பனைக்கு வந்திருந்தது. வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இதனால் பூக்களின் விலை உயர்ந்தது.
மல்லிகைப்பூ கிலோ நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.2 ஆயிரமாக உயர்ந்தது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்தது. கேந்திப்பூ ரூ.70, சேலம் அரளி ரூ.250, ரோஜா ரூ.220, சம்பங்கி ரூ.125, கொழுந்து ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிப்பூ ரூ.50-க்கும் விற்கப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் உற்பத்தி குறைவாக இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாகவும் பூக்கள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. தை மாதத்தில் திருமண நிகழ்ச்சிகளும் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.
தோவாளை பூ மார்க்கெட்டிற்கு ஆரல்வாய்மொழி, தோவாளை பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், சிதம்பரபுரம் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதுபோல மதுரை, பெங்களூரு, சேலத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகைப்பூக்களின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் இன்று காலை களை கட்டி இருந்தது.
பூக்கள் விற்பனைக்கு அதிகளவு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பிச்சி, மல்லிகைப் பூக்கள் இன்றும் குறைவான அளவே விற்பனைக்கு வந்திருந்தது. வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இதனால் பூக்களின் விலை உயர்ந்தது.
மல்லிகைப்பூ கிலோ நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.2 ஆயிரமாக உயர்ந்தது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்தது. கேந்திப்பூ ரூ.70, சேலம் அரளி ரூ.250, ரோஜா ரூ.220, சம்பங்கி ரூ.125, கொழுந்து ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிப்பூ ரூ.50-க்கும் விற்கப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கடுமையான பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் உற்பத்தி குறைவாக இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாகவும் பூக்கள் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. தை மாதத்தில் திருமண நிகழ்ச்சிகளும் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X