என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் குவிந்த வாழைத்தார்கள்
Byமாலை மலர்11 Jan 2021 2:55 PM GMT (Updated: 11 Jan 2021 2:55 PM GMT)
திருக்காட்டுப்பள்ளி ஏல மையத்தில் வாழைத்தார்கள் விற்பனை குவிந்தன. விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட் பகுதியில் வாழைத்தார் ஏல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏல மையத்தில் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டு வந்து ஏலம் விடுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல்வேறு கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்து ஏல மையத்தில் குவித்தனர்.
ஏல மையத்தில் நேற்று காலை 10 மணியிலிருந்து வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டன. பூவன், ரஸ்தாளி, பச்சை நாடன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிக அளவில் ஏலத்துக்கு வந்திருந்தன.
அவற்றை பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் மூலமாக வாங்கி விற்பனைக்கு எடுத்து சென்றனர்.
நேற்று அனைத்து வாழை ரகங்களும் சுமாரான விலைக்கே ஏலம் போயின. தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரை பகல் நேரத்தில் வாழை ஏலம் நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X