என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீ விபத்தில் காயம் அடைந்த மோட்டார்மெக்கானிக் பலி
Byமாலை மலர்4 Jan 2021 1:34 PM GMT (Updated: 4 Jan 2021 1:34 PM GMT)
கடையம் அருகே தீ விபத்தில் காயம் அடைந்த மோட்டார் மெக்கானிக் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி, வலையக்காரன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இவர் புத்தாண்டு தினத்தன்று காலை ஒர்க் ஷாப்பில் பூஜை செய்வதற்கு சூடன் கொளுத்தி விட்டு தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே போட்டுள்ளார்.
இதனால் அருகில் கிடந்த பழைய பொருட்கள் மற்றும் மோட்டார் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை தீப்பிடித்துள்ளது. இதில் சுரேஷ் மீது தீப்பற்றியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X