search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர் கூட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஜம்பை பகுதியைச் சேர்ந்த ரேணு மகன் முருகன்(வயது 20) என்பதும், மேல்சிறுவள்ளூர் கூட்டுரோடு பகுதிகளில் மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்தும் தெரிய வந்தது. 

    இதனையடுத்து முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×