search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுஉலை
    X
    கூடங்குளம் அணுஉலை

    கூடங்குளம் 1-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

    கூடங்குளம் 1-வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    1-வது அணு உலையில் கடந்த 14-ந் தேதி காலை திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது.

    தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை 7.55 மணிக்கு பழுது சீரமைக்கப்பட்டு 1-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது 340 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. 2-வது அணு உலையில் 950 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×