என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் 1-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
Byமாலை மலர்17 Dec 2020 4:56 AM GMT (Updated: 17 Dec 2020 4:56 AM GMT)
கூடங்குளம் 1-வது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
1-வது அணு உலையில் கடந்த 14-ந் தேதி காலை திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது.
தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை 7.55 மணிக்கு பழுது சீரமைக்கப்பட்டு 1-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது 340 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. 2-வது அணு உலையில் 950 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
1-வது அணு உலையில் கடந்த 14-ந் தேதி காலை திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்தது.
தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை 7.55 மணிக்கு பழுது சீரமைக்கப்பட்டு 1-வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது 340 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. 2-வது அணு உலையில் 950 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X