என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
Byமாலை மலர்12 Dec 2020 7:32 AM GMT (Updated: 12 Dec 2020 7:32 AM GMT)
கூடங்குளம் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
வள்ளியூர்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 2-வது அணு உலையில் கடந்த 9-ந் தேதி மதியம் 12.50 மணியளவில் டர்பனில் திடீரென்று ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. டர்பனில் ஏற்பட்ட பழுதை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் பழுது சீரமைக்கப்பட்டு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது 220 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. முதல் அணு உலையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 2-வது அணு உலையில் கடந்த 9-ந் தேதி மதியம் 12.50 மணியளவில் டர்பனில் திடீரென்று ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. டர்பனில் ஏற்பட்ட பழுதை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் பழுது சீரமைக்கப்பட்டு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது 220 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. முதல் அணு உலையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X