search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணு உலை
    X
    கூடங்குளம் அணு உலை

    கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

    கூடங்குளம் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
    வள்ளியூர்:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 2-வது அணு உலையில் கடந்த 9-ந் தேதி மதியம் 12.50 மணியளவில் டர்பனில் திடீரென்று ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. டர்பனில் ஏற்பட்ட பழுதை விஞ்ஞானிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் பழுது சீரமைக்கப்பட்டு 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது 220 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. முதல் அணு உலையில் 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×