search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நாகர்கோவில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    நாகர்கோவில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்: 

     நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி கவுரி (வயது 30). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வந்ததாகவும், இதனால் கவுரி மனவேதனையில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது கவுரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகிய அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கவுரி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×