என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுதை சரி செய்யும் பணி தீவிரம்
Byமாலை மலர்10 Dec 2020 8:21 AM GMT (Updated: 10 Dec 2020 8:21 AM GMT)
கூடங்குளம் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று 2-வது அணு உலையில் உள்ள டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது முதலாவது அணு உலையில் இருந்து 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 2-வது அணுஉலை டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று 2-வது அணு உலையில் உள்ள டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது முதலாவது அணு உலையில் இருந்து 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 2-வது அணுஉலை டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது.
அதனை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X