search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணு உலை
    X
    கூடங்குளம் அணு உலை

    கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுதை சரி செய்யும் பணி தீவிரம்

    கூடங்குளம் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று 2-வது அணு உலையில் உள்ள டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அந்த அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது முதலாவது அணு உலையில் இருந்து 800 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து கூடங்குளம் அணுமின்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 2-வது அணுஉலை டர்பைனில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது.

    அதனை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அங்கிருந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறினர்.

    Next Story
    ×