search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமி பாலியல் பலாத்காரம்: கண்டக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

    நாமக்கல் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தனியார் பஸ் பயிற்சி கண்டக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
    நாமக்கல்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்திபுரம் டி.என்.பி.எல். காலனியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் தனியார் பஸ்சில் பயிற்சி கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், நாமக்கல் அருகே உள்ள பொட்டணம்புதூரை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதோடு, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட கோகுலுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் பஸ் கண்டக்டர் கோகுலை போலீசார் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×