என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விற்பனையை அதிகரிக்க சொல்லி கஞ்சா வியாபாரியிடம் பேரம் பேசிய எஸ்.ஐ. இடமாற்றம்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கரணி பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் கஞ்சா வியாபாரியிடம் பேசியதாக வெளியானது.
அதில், மது, கஞ்சா விற்பனையை தொடக்கத்திலேயே அதிகமாக விற்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையை அதிகரிக்க வேண்டும், ஒரே இடத்தில் ஸ்டாக் வைத்துக் கொள்ளாமல் பிரித்து பதுக்கி வைக்க வேண்டும். ரைடு வராமல் இருக்க மாதத்திற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வோம் என போலீசார் பேசினார். அதற்கு கஞ்சா வியாபாரி நீங்கள் எங்கள் தெய்வம் மாதிரி என கூறுகிறார். இந்த ஆடியோ வேகமாக பரவியது.
ஆடியோவில் பேசியது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா, போலீஸ்காரர் குமார் என்பது தெரிய வந்தது. இவர்கள் கஞ்சா வியாபாரி ராமுவிடம் பேசி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கருப்பையாவை வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்