என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூரில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்4 Dec 2020 10:34 AM GMT (Updated: 4 Dec 2020 10:34 AM GMT)
கரூரில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் தாந்தோணிமலை பகுதிக்கு உட்பட்ட கருப்பகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 64). இவர் நேற்று முன்தினம் கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்தார்.
அப்போது சரஸ்வதி தனியாக வருவதை அறிந்த அந்த மர்ம நபர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சரஸ்வதி கழுத்தில் அணிந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் தங்கச்சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சரஸ்வதி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X