search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    உத்தமபாளையத்தில் லாட்டரி சீட்டுடன் சுற்றித்திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது உத்தமபாளையம் பஸ் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டுடன் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் ஞானம்பிகை கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 55) என்பதும், லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. மேலும் அவர் உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் (48) என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து அய்யப்பன், ஜாகீர்உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×