என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமப்பட்டி அருகே காப்பகத்தில் இருந்து சிறுமி மாயம்
Byமாலை மலர்28 Nov 2020 8:01 AM GMT (Updated: 28 Nov 2020 8:01 AM GMT)
எருமப்பட்டி அருகே காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுமி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜன்புரத்தில் ஒரு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் காப்பகத்தின் சுவர் மேல் ஏறிக்குதித்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமி சொந்த ஊரில் இருக்கும்போது அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை பார்த்த பள்ளிபாளையம் அலமேடு ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் செந்தில்குமார் (வயது 32) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்ததும், இதுபற்றி வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்த நிலையில்தான் அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தபோதுதான் மாயமாகி உள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X