search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வருசநாடு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    வருசநாடு அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடமலைக்குண்டு:

    வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன். இவருடைய மனைவி மீனா. இவருடைய மகள் சுரேகா (வயது 18). சம்பவத்தன்று மகாராஜனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது பெற்றோரிடம் சண்டையை நிறுத்துமாறு சுரேகா கூறியதாக தெரிகிறது. ஆனால் பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேகா வீட்டின் மாடிக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுரேகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×