என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயகாந்த் வலியுறுத்தல்
Byமாலை மலர்26 Nov 2020 8:19 AM GMT (Updated: 26 Nov 2020 8:19 AM GMT)
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை முழுவதும் கரையை கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X