search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயகாந்த் வலியுறுத்தல்

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை: 

    வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை முழுவதும் கரையை கடந்துள்ளது. 

    கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×