என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் பணம் திருட்டு
Byமாலை மலர்24 Nov 2020 4:53 AM GMT (Updated: 24 Nov 2020 4:53 AM GMT)
மதுரை அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதூர்:
மதுரை அருகே உள்ள உத்தங்குடி வளர்நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவர் சிவகங்கை மாவட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் வினோத்குமார் தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதன் உள்ளே இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த சில பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று காலையில் வீடு திரும்பிய வினோத்குமார் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்பிரிவு கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X