search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வலங்கைமான் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 3 பவுன் நகை கொள்ளை

    வலங்கைமான் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 3 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கிராமத்தை சேர்ந்த ராமு மகன் ராஜ்குமார் (வயது30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    அதில் இருந்த கம்மல், மோதிரம், வளையல் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதுதொடர்பாக ராஜ்குமார் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×