என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக சுற்றுப்பயணம் நிறைவு- டெல்லி புறப்பட்டார் அமித் ஷா
Byமாலை மலர்22 Nov 2020 5:19 AM GMT (Updated: 22 Nov 2020 5:19 AM GMT)
தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சென்னை வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா, மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழா முடிந்ததும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக பாஜக நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்து பேசினார். பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை ஓட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து 10.45 மணியளவில் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X