search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு தடுப்பணை
    X
    திற்பரப்பு தடுப்பணை

    திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும்- சுற்றுலா பயணிகள் கோரிக்கை

    திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அருமனை:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் குமரிக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதே போல் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப் படாததால் திற்பரப்பில் தடுப்பு அணைப்பகுதியில் வந்து குளிக்கின்றனர். அந்த பகுதி பல்வேறு விதங்களில் ஆபத்துக்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. புதிதாக தொலை தூரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் ஆழமான பகுதிகள் தெரிவதில்லை. இதனால் அங்கு குளிக்கும் போது பாறைகளின் இடுக்குகளில் சுற்றுலா பயணிகள் மாட்டிக்கொள்ளும் ஆபத்தான நிலை உள்ளது. மேலும் திற்பரப்பு பகுதியில் உள்ள பாறைகளில் மழைக்காலங்களில் அதிகமாக வழுக்குவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. பாறைகளில் வழுக்கி விழுந்துபலத்த காயத்துடன் செல்கின்றனர்.

    எனவே ஆபத்தான இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.

    மேலும் திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
    Next Story
    ×