search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திற்பரப்பு அருவி"

    • தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதை யடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

    தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

    அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது. அணைக்கு 906 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.30 அடியாக உள்ளது. அணைக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மேலும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சேதம் அடைந்த விளைநிலங்கள் கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே வீசிய சூறைகாற்றிற்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகளும் முறிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில் நகர பகுதியில் ஏற்கனவே மீனாட்சி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் ஓரளவு வடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அந்த பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பிளீச்சிங் பவுடர்களும் தூவப்பட்டு வருகிறது.

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்துள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று வீசி வருகிறது. அணைப் பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனையடுத்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு 3-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.12 அடியாக உள்ளது. அணைக்கு 1639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1550 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.80 அடியாக உள்ளது. அணைக்கு 1849 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1432 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 187 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 129 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணை நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது.

    ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உடைந்துள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மழைக்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 18 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 8 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    கன்னியாகுமரி பகுதியில் இன்று 2-வது நாளாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள மீனவர் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சூறை காற்றுக்கு அகஸ்தீஸ்வரம், வடுவன் பற்று பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மின்கம்பங்கள் சேதமானதையடுத்து நேற்று இரவு தென்தாமரைகுளம் சுற்றுவட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. நள்ளிரவு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

    • குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படு கிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழித்துறை ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.59 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று இரவு 638 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரக்கூ டிய நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று காலை 2000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மதகுகள் வழியாக 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் உபரிநீரை அதி கரிக்கவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதேபோல் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 73.60 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை அணைக்கு 3000 கன அடியாக அதிகரித்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றாறு-1 அணைக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட் டுள்ளது.

    3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதேபோல் மாம்பழத்துறையாறு அணையும் இன்று முழு கொள்ளள வான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    • நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது.
    • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக பரவலாக தினமும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவி வருகிறது. காலையில் வெயில் அடித்தாலும் தினமும் இரவு நேரத்தில் மழை நீடித்து வருவதால் இதமான குளிர் காற்றும் வீசி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவிலில் நேற்று மாலையில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

    சிற்றாறு-2 அணைப்பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 122.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, களியல், கன்னிமார், தக்கலை, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சிற்றார் 1- நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் மழையின் காரணமாக கோதையாறு, வள்ளியாறு, பரளிஆறு, பழையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    புத்தனார் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மணவாளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு நெல் அறுவடை செய்து கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த டிரைவர் சபரி ராஜா மின்னல் தாக்கி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் தலா 2 வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.33 அடியாக உள்ளது. அணைக்கு 839 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 630 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.97 அடியாக உள்ளது. அணைக்கு 261 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து 234 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 88.6, பெருஞ்சாணி 7.2, சிற்றார் 1-93.4, சிற்றார் 2- 122.6, களியல் 54.4, கன்னிமார் 57.8, கொட்டாரம் 10.2, குழித்துறை 20, மயிலாடி 5.2, நாகர்கோவில் 32.4, புத்தன் அணை 5.6, சுருளோடு 35.2, தக்கலை 88, குளச்சல் 14, இரணியல் 42, பாலமோர் 24.4, மாம்பழத்து றையாறு 95.4, திற்பரப்பு 24.8, கோழிப்போர்விளை 78.2, அடையாமடை 20, குருந்தன்கோடு 48, முள்ளங்கினாவிளை 25.6, ஆணைக்கிடங்கு 94.2, முக்கடல் 32.

    • பெருஞ்சாணி அணை 70 அடியை எட்டியது
    • மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பியது.

    மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. சிற்றாறு அணை நிரம்பி யதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற் றப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்ப தற்கு தடை விதிக்கப் பட்டு இருந்தது. இந்த நிலை யில் கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் சிற்றாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    அணையிலிருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் படிப் படியாக குறைந்து வருகிறது. திற்பரப்பு அருவி யிலும் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கு குறைந்து மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அணையில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதை யடுத்து 10 நாட்களுக்கு பிறகு குளிப்ப தற்கு விதிக்கப்பட்டி ருந்த தடை நீக்கப்பட்டது.

    இன்று அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மானோர் அருவியில் குளிப்ப தற்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளிய லிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகா ரிகள் அணையின் நீர்மட் டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.69 அடியாக உள்ளது. அணைக்கு 610 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 449 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழி கிறது.

    முக்கடல் அணை நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது. நாளைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாகர்கோவில் நகர மக்களுக்கு புத்தன் அணையிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். முக்கடல் அணை நிரம்பி வருவதையடுத்து முக்கடல் தண்ணீரை சப்ளை செய்வ தற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தொடர்ந்து தடை நீடிப்பு
    • விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி வந்த நிலையில் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படிப் படியாக குறைய தொடங்கி யுள்ளது. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்ப தற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ள நிலையில் நேற்று மேலும் 9 வீடுகள் இடிந்து உள்ளது.

    விளவங்கோடு தாலு காவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 5 வீடுகளும் சேத மடைந் துள்ளன.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளை பொதுப்பணித்துறை அதி காரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வரு கிறார்கள். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.79 அடி யாக உள்ளது. அணைக்கு 1104 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 228 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 40 அடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 841 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 15.78 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 15.87 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்ப ழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 50.94 அடியா கவும் உள்ளது. நாகர்கோ வில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.40 அடியாக உள்ளது.

    • சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
    • கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பருவ மழை கள் வழக்கத்தை விட குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைந்தது. நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை மைனஸ் அடிக்குச் சென்றது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. முக்கடல் அணையும் பிளஸ் அளவிற்கு வந்தது. தொடர்ந்து பெய்த மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.

    குறிப்பாக மலைப்பகுதிகளில் பெரும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான பள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது.

    திற்பரப்பு அருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கால்வாய்களும் நிரம்பியதால், மறுகால் பாய்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த சூழலில் நேற்று பகல் முதல் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு-2 அணை பகுதியில் 34.2 மி. மீ. மழையும், சிற்றாறு-1 அணை பகுதியில் 24.6 மி. மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 19.8 மி. மீ. மழையும் பதிவாகி உள்ளது. புத்தன் அணை பகுதியில் 17.6 மி.மீட்டரும், பேச்சிப்பாறை அணையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.84 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளது. சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள் உச்ச அளவை எட்டி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1451 கன அடி நீரும், பெரு ஞ்சாணி அணைக்கு 1180 கன அடி தண்ணீரும் வந்து கொண்டி ருக்கிறது. நேற்று சிற்றாறு-1 அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 500 கன அடி திறந்து விடப்பட்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பழையாறு, வள்ளி ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவு விழுவதால், 5-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மழை குறைந்தபோதிலும், வெள்ளத்தின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. திக்குறிச்சி, முன்சிறை பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தே உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.

    மழை பெய்யும் போதெல்லாம் தங்கள் குடியிருப்பு பகுதி இதே நிலையை தான் சந்திக்கிறது. இதுபற்றி பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டாரில் 4 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. 3 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவலோகம் (சிற்றாறு-2) 34.2 சிற்றாறு-1 24.6, பெருஞ்சாணி 19.8 புத்தன் அணை 17.6 பேச்சிப்பாறை 12.4, பாலமோர் 5.2 முள்ளங்கினாவிளை 4.6 திற்பரப்பு 4.5, தக்கலை, களியல், மாம்பழத்துறையாறு 3.2. 

    • மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.
    • தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அங்கு அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணைக்கிடங்கு, களியல், கோழிப்போர்விளை, குழித்துறை பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிலும் விடிய விடிய மழை பெய்தது.

    சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2, அணைகள் நிரம்பி வருவதையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மதகு வழியாக 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு-1 அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் குழித்துறை-ஆலஞ்சோலை சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மோதிரமலை குற்றியாறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37 அடியாக இருந்தது. அணைக்கு 1487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.35 அடியாக உள்ளது. அணைக்கு 723 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1-அணை நீர்மட்டம் 16.76 அடியாக உள்ளது. அணைக்கு 1158 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரி நீராகவும் மதகுகள் வழியாகவும் 737 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் கூடுதல் உபரி நீரை வெளியேற்றவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அணை நீர்மட்டத்தை அவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 16.86 அடியாக உள்ளது. அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 43.14 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.30 அடியாக உள்ளது. தொடர்மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • களியலில் 71 மில்லி மீட்டர் பதிவு
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.களியல் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 71 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அருவியில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிபாறை பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்து வருகிறது.மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிபாறை பெருஞ்சாணி அணை களுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை யின் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கியுள்ளது.

    நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தடிக்காரங்கோணம் கீரிப்பாறை குலசேகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்தது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 34.79 அடியாக உள்ளது. அணைக்கு 980 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது.அணைக்கு 621 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1-அணைநீர்மட்டம் 14.73 அடியாகவும் சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 14.83 அடியாகவும் உள்ளது.பொய்கை நீர்மட்டம் 9.10 அடியாகவும் மாம்பழத் துறையார் அணை நீர்மட்டம் 35.76 அடியாகவும் முக்கடல் நீர்மட்டம் 16.10 அடியாகவும் உள்ளது.

    மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு பேச்சிபாறை 46 பெருஞ்சாணி 43.4 புத்தன் அணை 44.2 சிற்றார் 1-41.2சிற்றார்2-22.4 பூதப்பாண்டி 6.2 களியல் 71 கன்னிமார் 2.2 குழித்துறை 12.8 சுருளோடு 11.2 தக்கலை 1 குளச்சல் 8.6 இரணியல் 6 பாலமோர் 12.2 திற்பரப்பு 65.2 கோழிபோர்விளை 3.4 முள்ளங்கினாவிளை 4.2 முக்கடல் 8.2.

    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
    • பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, ஆணைக்கிடங்கு, கோழி போர்விளை, முள்ளங்கினா விளை, புத்தன்அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 18.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாகவே இருந்தது. காலை 10 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரமாக மழை கொட்டியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.46 அடியாக உள்ளது. அணைக்கு 435 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.40 அடியாக உள்ளது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 12, பெருஞ்சாணி 7.2, சிற்றாறு 1-6.4, மாம்பழத்துறையாறு 8.4, பூதப்பாண்டி 6.2, சுருளோடு 12.6, கன்னிமார் 8.4, பாலமோர் 13.4, மயிலாடி 4.6, கொட்டாரம் 2.6, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 4.1, கோழி போர்விளை 4.2, முள்ளங்கினா விளை 18, திற்பரப்பு 10.9, நாகர்கோவில் 5.4.

    ×