என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 நாள் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் புதிய தடுப்பணை இடிந்தது
Byமாலை மலர்21 Nov 2020 4:03 AM GMT (Updated: 21 Nov 2020 4:03 AM GMT)
சாயல்குடி அருகே 2 நாள் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் புதிய தடுப்பணை இடிந்தது.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூரான்கோட்டை கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்குமுன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் 14.5 மீட்டர் நீளத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை மழைநீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும் கட்டப்பட்டது.
ஆனால், இந்த புதிய தடுப்பணை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நீர்வரத்துக்கு, தாக்குப்பிடிக்காமல் இடிந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தடுப்பணையை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, தரமான கட்டுமான பொருட்களை கொண்டு புதிய தடுப்பணையை கட்டிக்கொடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் தடுப்பணை சேதம் பற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூரான்கோட்டை கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்குமுன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் 14.5 மீட்டர் நீளத்தில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை மழைநீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும் கட்டப்பட்டது.
ஆனால், இந்த புதிய தடுப்பணை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நீர்வரத்துக்கு, தாக்குப்பிடிக்காமல் இடிந்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தடுப்பணையை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, தரமான கட்டுமான பொருட்களை கொண்டு புதிய தடுப்பணையை கட்டிக்கொடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் தடுப்பணை சேதம் பற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X