search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூங்கோதை ஆலடி அருணா
    X
    பூங்கோதை ஆலடி அருணா

    திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை டிஸ்சார்ஜ்

    உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பூங்கோதை ஆலடி அருணாவுக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் கடையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது அவருக்கும், கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று அவர் உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதாகவும், அதனால் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார்.

    இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    Next Story
    ×