என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீர் வராததால் ஆத்திரம்: காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Byமாலை மலர்11 Nov 2020 9:32 AM GMT (Updated: 11 Nov 2020 9:32 AM GMT)
தஞ்சையில் குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவாசலில் குடிசை மாற்றுவாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அகழிகரையோரத்தில் உள்ள குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த குழாயை அடைத்துவிட்டு வடக்குஅலங்கம் அரசமரத்தடி அருகே புதிதாக குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் சரிவர குடிநீர் வரவில்லை என தெரிகிறது. கடந்த 3 நாட்களாக குடிநீர் வராததுடன், ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரும் பழுது ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தஞ்சை வடக்குவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மேற்கு போலீசார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருப்பு பகுதிகளுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X