search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    பாஜக சட்டத்தை மீறினால் நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்

    பாஜக வேல் யாத்திரையை கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
    சென்னை:

    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும்.

    வேல் யாத்திரை மூலம் மக்களுக்கு கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது.

    பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை

    சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது. சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×