என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Byமாலை மலர்30 Oct 2020 8:01 PM GMT (Updated: 30 Oct 2020 8:01 PM GMT)
“தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை கருணாநிதி நீக்கிய பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற 10 சட்டசபை தேர்தல்களில் 7-ல் அ.தி.மு.க. வும், 3-ல் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் இதுவரையிலும் வேரூன்றவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு பல திரைப்பட நடிகர்கள், சிவாஜி முதல் கமல்ஹாசன் வரையிலும் கட்சிகள் ஆரம்பித்து இருந்தாலும், யாரும் நிலைத்து நிற்கவில்லை.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளே என்றும் நிலைத்து நிற்கும் கட்சிகளாக உள்ளன. மற்ற கட்சிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அ.தி.மு.க. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் எத்தனை கட்சிகள் வந்தாலும், எத்தனை போட்டிகள் இருந்தாலும், தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X